search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபச்சார அழகி"

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் விபச்சார அழகி என்று நினைத்து பியூட்டி பார்லர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேலத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த அழகு நிலையத்தில் இருந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்ட ஊழியர்கள் அழகு நிலையத்தில் பணியிடம் காலியாக இருப்பதாகவும், உடனே புறப்பட்டு சேலத்திற்கு வரும்படியும் கூறினர். மேலும் சேலம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி அழகு நிலையத்திற்கு வருமாறும் கூறி உள்ளனர்.

    இதையடுத்து அந்த இளம்பெண் கடந்த 18-ந் தேதி இரவு பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். இரவு 11 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தடைந்தது. பஸ் நிலையத்தை விட்டு பஸ் வெளியில் வந்ததும் அங்கு தயாராக நின்ற வாலிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள் சேலம் நகருக்குள் சிட்டாய் பறந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சேலம் குரும்பப்பட்டி உயிரியில் பூங்காவை தாண்டி காட்டுப்பகுதிக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காட்டுப்பகுதியிலா? அழகு நிலையம் இருக்கும் என்று சந்தேகம் அடைந்தார்.

    அப்போது அந்த வாலிபரிடம் இளம்பெண் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் பார்சல் சாப்பாட்டை கொடுத்து சாப்பிடும் படி கொடுத்தார். சாப்பிட்டு முடித்ததும் அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை உல்லாசம் அனுபவிக்க முயன்றார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் கூச்சலிட்டார். இதனால் பயந்து போன அந்த வாலிபர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

    இது குறித்து அந்த பெண் கூகுள் உதவியுடன் கொடுத்த தகவலின் பேரில் டவுன் அனைத்து மகளிர் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு அழைத்து வந்தனர்.

    இது தொடர்பாக அந்த பெண் பள்ளப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணை அழைத்து சென்ற சேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்ற வாலிபரை பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    கடந்த 18-ந் தேதி இரவு அன்பழகன் விபசாரத்திற்கு ஒரு பெண்ணை அழைத்து விட்டு அந்த பெண்ணுக்காக சேலம் புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அதே நேரத்தில் பெங்களூரை சேர்ந்த இளம்பெண் பியூட்டி பார்லர் வேலைக்கு செல்வதற்காக அதே பகுதிக்கு வந்துள்ளார். இதனால் நாம் அழைத்த பெண் தான் இவர் என்று நினைத்து அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றார்.

    பின்னர் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருக்க முயன்ற போது அவர் மறுத்ததால் பயந்து போய் அங்கிருந்து அன்பழகன் தப்பி யோடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×